வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அனுப்பும் பணம் இலங்கை ரூபாவாக கட்டாயம் மாற்றப்பட வேண்டுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அனுப்பும் பணம் இலங்கை ரூபாவாக கட்டாயம் மாற்றப்பட வேண்டுமா?


வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற வதந்தி முற்றிலும் தவறானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் பணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வெளிநாட்டு நாணயத்தில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படுவதற்கோ அல்லது இலங்கை ரூபாயாக மாற்றப்படுவதற்கோ எந்தத் தடையும் இல்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.