வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற வதந்தி முற்றிலும் தவறானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் பணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வெளிநாட்டு நாணயத்தில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படுவதற்கோ அல்லது இலங்கை ரூபாயாக மாற்றப்படுவதற்கோ எந்தத் தடையும் இல்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)