அரசினால் தடை செய்து வெளியிட்ட முக்கிய வர்த்தமானி அறிவிப்பு நீக்கம் - அமைச்சர் மகிந்தானந்த அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசினால் தடை செய்து வெளியிட்ட முக்கிய வர்த்தமானி அறிவிப்பு நீக்கம் - அமைச்சர் மகிந்தானந்த அதிரடி!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை தனியார் துறையினர் இன்று முதல் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.