மீண்டும் ஒரு கேஸ் வெடிப்பு சம்பவம் சற்றுமுன் பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் ஒரு கேஸ் வெடிப்பு சம்பவம் சற்றுமுன் பதிவானது!


திம்புள்ள - பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெய்திலி தோட்ட குடியிருப்பொன்றில் இன்று (30) மாலை 6.00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


வீட்டில் இருந்த சமையல் எரிவாயு கொள்கலனில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது.


வெடிப்பு மற்றும் தீப்பரவல் காரணமாக, சமையல் எரிவாயு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் கட்டமைப்பு மற்றும் ஏனைய பொருட்களும் சேதமடைந்துள்ளன.


சமையலறையில் எவரும் இல்லாததன் காரணமாக எவருக்கும் தீக்காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்படவில்லை.


கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்வனவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலனிலேயே இவ்வாறு கசிவு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த எரிவாயு கொள்கலன் வீட்டாரினால் வெளியே எரியப்பட்டதால், ஏற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், அயலவர்களால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்விடயம் சம்பந்தமாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தருக்கும் திம்புள்ள - பத்தனை காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.