பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!


பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வனாதவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பெண் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வனாதவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிய செயற்பட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் நாலிந்த உபுல் பதிரத்ன கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.


குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.


அதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவரின் காணி பிரச்சினைக்கு அவருக்கு ஆதரவாக செயற்பட்டு தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணமும் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த தினம் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.