மத்திய மலைநாட்டில் பெய்வரும் கடும் மழை காரணமாக, கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (26) பெய்த கடும் மழையினால், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோரே இருந்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவரும், மகளும் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை, கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.