சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று, கொரோனா அபாயம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களையும், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் தீர்மானிப்பதற்காகவே தகுதிச் சுற்றுப் போட்டிகளை டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)