புதிய வியாபாரங்களை ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு இலங்கை இளைஞர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய வியாபாரங்களை பதிவு செய்வது தொடர்பில் பல சலுகைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வர அதிகாரிகளுடன் இணைந்து இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். (யாழ் நியூஸ்)