இலங்கையின் பணவீக்கம் பாரிய அளவில் அதிகரிப்பு! வெளியாகியுள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் பணவீக்கம் பாரிய அளவில் அதிகரிப்பு! வெளியாகியுள்ள அறிவிப்பு!


இலங்கையின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செப்டெம்பர் மாதத்தில் 6.2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், 2.1 ஆல் உயர்ந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளது. இது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகளின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


உணவுப் பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதத்தை விட பணவீக்கம் அதிகரிப்பதற்கு வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் பல்வகைப் பொருட்களின் விலை அதிகரிப்புகள் முக்கிய காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.