இரு வேறு புகையிரதங்களில் மோதி இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு வேறு புகையிரதங்களில் மோதி இருவர் பலி!

கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (26) புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் அவர் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று (26) இரவு வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதி சந்திக்கு அருகில் 48 வயதுடைய நபரொருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் கொழும்பில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.