கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 06 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த பலர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், சப்ரியா (30 வயது) என்ற முன்பள்ளி ஆசிரியரும் அவரது முன்பள்ளியில் கல்விபயிலும் மகளான பாத்திமா சகிலா (மூன்றரை வயது) மற்றும் அவரது மகனான சேகுசகி (06 வயது) அடங்குகின்றனர்.
பாத்திமா சிரின் (08 வயது) மற்றும் அவரது இளைய சகோதரி (06 வயது) ஒருவர் உட்பட சேகு அப்துல் காதர் (70 வயது) என்ற வயோதிபரும் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த 06 வயது சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களில் 05 பெண் குழந்தைகளும், 06 ஆண் குழந்தைகளும், 04 பெண்கள் மற்றும் 04 ஆண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.