கதிர்காம ஆலயமொன்றில் ஐந்து கோடி பெறுமதியான இரத்தினக்கல் திருட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கதிர்காம ஆலயமொன்றில் ஐந்து கோடி பெறுமதியான இரத்தினக்கல் திருட்டு!


கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான இரத்தினக்கல் ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் குறித்த இரத்தினக்கல் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.


இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, கதிர்காமம் ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 38 பவுண் தங்கத்தட்டு காணாமல் போனமை தொடர்பில் அங்கொட லொக்காவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.


அங்கொட லொக்காவின் மகனின் தோஷத்தை போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி கதிர்காமம் ஆலயத்திற்கு குறித்த தங்க தட்டு காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.