பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களும் டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைய மகன் ரோஹித ராஜபக்ச ஏற்கனவே தான் விளையாடும் புனித தோமஸ் கிரிக்கெட் அணியுடன் டுபாய் சென்றிருந்தார்.
அதேநேரம் யோஷித ராஜபக்ச ஏற்கனவே டுபாய் சென்றுள்ளார்.
இந்நிலையில் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியை பார்வையிட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுபாய் செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.