இம்முறை வரவு செலவுத் திட்டத்தை மிகவும் கடினமான நேரத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததாக அமைச்சர் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நிதியமைச்சர் ஒருவருக்கு வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதில் மிகவும் சவாலான தருணம் இது என்றும் அவர் மேலும் கூறினார்.
பசில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எவருக்கும் இந்தப் பணியை செய்ய முடியாது என்ற நிலை இருந்த நிலையிலேயே அவர் இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராக ரொனி மெல் இருந்திருந்தால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பசில் ராஜபக்சவை பாராட்டியிருப்பார் என்றும் சந்திரசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நிதியமைச்சர் ஒருவருக்கு வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதில் மிகவும் சவாலான தருணம் இது என்றும் அவர் மேலும் கூறினார்.
பசில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எவருக்கும் இந்தப் பணியை செய்ய முடியாது என்ற நிலை இருந்த நிலையிலேயே அவர் இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராக ரொனி மெல் இருந்திருந்தால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பசில் ராஜபக்சவை பாராட்டியிருப்பார் என்றும் சந்திரசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)