சன்ஷைன் சுத்தாவை படுகொலை செய்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சன்ஷைன் சுத்தாவை படுகொலை செய்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

சன்ஷைன் சுத்தா கொலை


கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சன்ஷைன் சுத்தா என்ற அமில பிரசன்ன ஹெட்டிஹேவாவின் கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று (26) அதிகாலை களுத்துறையில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
 
இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட டின்கர் லசந்த எனப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த எனும் சந்தேக நபர் மேலும் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் ஆவார். 

களுத்துறை, தியகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காட்ட முற்பட்ட வேளையில், பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். 

பின்னர் பொலிஸார் மேற்கொண்ட எதிர் தாக்குதலில் அவர் காயமடைந்தது பலியானார். இச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.