மேலும், சம்பவ இடத்தில் வீட்டின் மீதுள்ள பாதுகாப்பு கெமராக்கள் உடைக்கப்பட்ட நிலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு சேதங்கள் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள குறிஞ்சங்கேணி பாலம் கட்டுமான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், அதனை சீரமைக்கும் பணியின் காரணமாகவே படகுச் சேவை இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று கிண்ணியாவில் பதற்றமான சூழ்நிலையும், அதிகாரிகளின் அசமந்தப் போக்கைக் கண்டித்தும் பொதுமக்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது படகில் இருந்த காணாமல் போன பயணிகளை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)