கிண்ணியா எம். பி தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிண்ணியா எம். பி தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல்!


கிண்ணியா - குறிஞ்சாக்கேணி தற்காலிக படகு கவிழ்ந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டதையடுத்து ஆத்திரம் அடைந்த  இளைஞர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீகின் வீட்டின் மீது இன்று (23) மதியம் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் வீட்டின் மீதுள்ள பாதுகாப்பு கெமராக்கள் உடைக்கப்பட்ட நிலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு சேதங்கள் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள குறிஞ்சங்கேணி பாலம் கட்டுமான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், அதனை சீரமைக்கும் பணியின் காரணமாகவே படகுச் சேவை இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று கிண்ணியாவில் பதற்றமான சூழ்நிலையும், அதிகாரிகளின் அசமந்தப் போக்கைக் கண்டித்தும் பொதுமக்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது படகில் இருந்த காணாமல் போன பயணிகளை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.