நாட்டின் பொருளாதார நெருக்கடி; நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதார நெருக்கடி; நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா?


எதிர்வரும் ஆண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


எனினும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செலவீனம் வருமானத்தை விட அதிகரித்துள்ளமையினால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாவிட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் 45% மக்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அடுத்த 04 வருடங்களுக்குள் அதனை 80% அதிகரிப்பதே தமது இலக்கு என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.