சப்புகஸ்கந்த - மாபிம பயணப்பையில் மீட்கப்பட்ட சடலம்; பிரதான சந்தேக நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சப்புகஸ்கந்த - மாபிம பயணப்பையில் மீட்கப்பட்ட சடலம்; பிரதான சந்தேக நபர் கைது!


சப்புகஸ்கந்த மாபிம வீதியிலுள்ள குப்பை மேடு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் பயணப்பையில் கொண்டு வரப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதான சந்தேக நபர் இன்று (09) கைது செய்யப்பட்டதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.


தங்க நகைகள், பணம் மற்றும் சடலத்தை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நெக்லஸ், ஒரு சோடி தங்கக் காதணிகள் மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை சந்தேக நபர் ஹெட்டி வீதியில் உள்ள தங்க நகை கடைக்கு 169,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.


மேலும் கைது செய்யப்பட்ட மட்டக்குளியை சேர்ந்த தம்பதியினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.