நாட்டில் மேலுமொரு வெடிப்பு சம்பவம் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலுமொரு வெடிப்பு சம்பவம் !

ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று எரிவாயு கசிவு ஏற்பட்டு கடைக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தாம் சில காலமாக உணவகத்தை நடத்தி வருவதாகவும், இன்று காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயுத் தாங்கி மற்றும் எரிவாயு அடுப்புக்கு இடையில் இருந்த எரிவாயுக் குழாய் திடீரென வெடித்து தீப்பிடித்ததாக வர்த்தகர் தெரிவித்தார்.

தீயினால் கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சமைத்துக்கொண்டிருந்த உணவு மற்றும் பானங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.