சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துப் பரீட்சை முறைமைய மாற்றியமைக்க முன்மொழிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துப் பரீட்சை முறைமைய மாற்றியமைக்க முன்மொழிவு!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துப் பரீட்சை அடுத்த வருடம் முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் அதிகளவான பரீட்சார்த்திகள் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதை கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவின்படி, விண்ணப்பதாரர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.