சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துப் பரீட்சை அடுத்த வருடம் முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் அதிகளவான பரீட்சார்த்திகள் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதை கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, விண்ணப்பதாரர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் அதிகளவான பரீட்சார்த்திகள் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதை கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, விண்ணப்பதாரர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)