14 வயது சிறுவன் தனது உறவினரான 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய நீதவான் ஜனனி எஸ்.விஜேதுங்க வின் உத்தரவின் பேரில் குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உத்தரவை பிறப்பித்த மாஜிஸ்திரேட், ஆன்லைன் கல்வியில் ஈடுபடும் போது குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்கத் தவறினால், குழந்தைகளின் நடத்தைக்கு பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், குடும்பத் தகராறு காரணமாக வாலிபரும் அவரது தம்பியும் தங்கள் அத்தையின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன்போது அதே வீட்டில் வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியே குறித்த வாலிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (15) பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தனது பாடசாலையில் சில சாதாரண தர பரீட்சை வகுப்பு மாணவர்களின் ஆலோசனையின் பேரில், யூடியூப் மற்றும் ஏனைய இணையத்தளங்கள் போன்ற சமூக ஊடக தளங்களில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை பார்க்க ஆரம்பித்ததாகவும், அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட பின்னர் ஆன்லைன் கல்வியை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். .
வயது வந்தோருக்கான வீடியோக்களில் காணப்பட்ட செயல்களை தனது தாயின் சகோதரரின் மகளான தனது 5 வயது உறவினரிடம் பரிசோதனை செய்ததாக குழந்தை கூறியதாக பதின்ம வயதினரின் பொறுப்பான நன்னடத்தை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
குளியாப்பிட்டிய நீதவான் ஜனனி எஸ்.விஜேதுங்க வின் உத்தரவின் பேரில் குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உத்தரவை பிறப்பித்த மாஜிஸ்திரேட், ஆன்லைன் கல்வியில் ஈடுபடும் போது குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்கத் தவறினால், குழந்தைகளின் நடத்தைக்கு பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், குடும்பத் தகராறு காரணமாக வாலிபரும் அவரது தம்பியும் தங்கள் அத்தையின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன்போது அதே வீட்டில் வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியே குறித்த வாலிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (15) பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தனது பாடசாலையில் சில சாதாரண தர பரீட்சை வகுப்பு மாணவர்களின் ஆலோசனையின் பேரில், யூடியூப் மற்றும் ஏனைய இணையத்தளங்கள் போன்ற சமூக ஊடக தளங்களில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை பார்க்க ஆரம்பித்ததாகவும், அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட பின்னர் ஆன்லைன் கல்வியை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். .
வயது வந்தோருக்கான வீடியோக்களில் காணப்பட்ட செயல்களை தனது தாயின் சகோதரரின் மகளான தனது 5 வயது உறவினரிடம் பரிசோதனை செய்ததாக குழந்தை கூறியதாக பதின்ம வயதினரின் பொறுப்பான நன்னடத்தை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)