எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (12) மதியம் பாடசாலையை விட்டு வெளியேறிய வேளையில், சந்தேகநபர்கள் மூவர் மாணவியை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் செவனகல பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கடத்தல்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், துஷ்பிரயோகம் செய்தவர்களின் முயற்சிகளை பாடசாலை மாணவி பதிலடி கொடுத்து முறியடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் வழிப்போக்கர் ஒருவர் சிறுமியை வீடு திரும்ப உதவியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 16 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
வெள்ளிக்கிழமை (12) மதியம் பாடசாலையை விட்டு வெளியேறிய வேளையில், சந்தேகநபர்கள் மூவர் மாணவியை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் செவனகல பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கடத்தல்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், துஷ்பிரயோகம் செய்தவர்களின் முயற்சிகளை பாடசாலை மாணவி பதிலடி கொடுத்து முறியடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் வழிப்போக்கர் ஒருவர் சிறுமியை வீடு திரும்ப உதவியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 16 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)