பஸ்யால - கிரிஉல்ல வீதி வாகன விபத்தில் இருவர் பலி; சிறு குழந்தை உட்பட மேலும் சிலர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்யால - கிரிஉல்ல வீதி வாகன விபத்தில் இருவர் பலி; சிறு குழந்தை உட்பட மேலும் சிலர் காயம்!

பஸ்யாலை - கிரி உல்ல வீதியில் உள்ள தன்சலே வத்த பிரதேசத்தில், நேற்று (08) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், சிறு குழந்தை உட்பட மேலும் சிலர் காயமடைந்து, வத்துபிட்டிவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் 47 வயதான சந்தன பெரேரா, 42 வயதான மானெல் பெரேரா ஆகியோர் மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்யாலை திசையிலிருந்து கிரி உல்ல திசை நோக்கிப் பயணித்த கண்டேனர் லொறி, முன்பாக வந்த வேன் மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கண்டேனர் வாகனம், நேருக்கு நேராக வேனுடன் மோதியதால் வேனின் ஜன்னல், கதவுகள் கழன்று வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறு குழந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ஐ. ஏ. காதிர் கான்
மினுவாங்கொடை நிருபர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.