புர்கா விடயம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புர்கா விடயம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை!


முகத்தை முழுமையாக மூடும் (புர்கா) விடயம் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விடயம். நீதி அமைச்சுக்கு அப்பாற்பட்ட விடயதானம் என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.

இதன்படி, பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைப்பதை தடுக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதோடு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, சட்ட வரைஞர் திணைக்களம் இது தொடர்பான சட்ட வரைபை தயாரித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.

அரசாங்க சட்ட தயாரிப்பு முறையின் படி, அது முறையாக வர்த்தமானியாக வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.