அனைத்து பதவிகளையும் கைவிட்டு அரசில் இருந்து வெளியேற தயார் - மகிந்த அமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பதவிகளையும் கைவிட்டு அரசில் இருந்து வெளியேற தயார் - மகிந்த அமரவீர

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என மத்திய செயற்குழு தீர்மானத்தால், அனைத்து பதவிகளையும் கைவிட்டு வெளியேற தயாராக இருக்கின்றோம் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மகிந்த அமரவீர அரசாங்கத்தில் இருந்து விலகுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உடனடியாக தீர்மானித்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கிராம மட்டத்தில் கிளை, சங்கங்களை கூட்டி, அந்த தீர்மானம் எடுக்கப்பட்டால், அதற்கு கட்டுப்பட கட்சி தயாராக இருக்கின்றது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.