பாடசாலைகளில் தீவிரமடையும் கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளில் தீவிரமடையும் கொரோனா தொற்று!


பல்வேறு கட்டங்களில் பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். 


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திலேயே ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாத சூழ்நிலையில், நாளாந்த கொரோனா தொற்று அதிகரித்துள்ளன என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, இந்த கவலைக்கிடமான நிலை தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்கும் நோக்கில் பாடசாலைகள் திறக்கப்பட்டதாகவும், சுகாதார வழிகாட்டுதல்களின்படி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


சுகாதாரப் பொருட்களையோ, தொற்றுநீக்கிகளையோ வாங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பாடசாலை சூழலில் இருந்து வைரஸ் தொற்றுக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் சொந்த செலவில் பீசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனவே, மொத்த பீசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைக் கட்டணங்களை வழங்கவும், பணியில் இருக்கும் போது விடுமுறை பெறுவது தொடர்பில் உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் எனவும் சங்கம் தமது கடிதத்தின் மூலம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.