சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு - பதுளை இடையிலான புகையிரத சேவை இன்று (29) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன்படி, உடரட புகையிரத வீதியின் “பொடி மெனிகே” புகையிரதம் மாத்திரம் இன்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)