கொழும்பு - பதுளை இடையிலான புகையிரத சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!
Posted byAdmin-
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு - பதுளை இடையிலான புகையிரத சேவை இன்று (29) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன்படி, உடரட புகையிரத வீதியின் “பொடி மெனிகே” புகையிரதம் மாத்திரம் இன்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.