இன்று (24) நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான T20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.
பங்களாதேஷ் இன்னிங்ஸின் 6 வது ஓவரில் லஹிரு குமாரவின் பிட்ச்-அப் டெலிவரிக்கு பந்தை லிட்டன் தாஸ் எட்ஜ் செய்த தருணம் வட்டத்தின் விளிம்பில் இருந்த தசுன் ஷாணக்கவின் கையில் சிக்கியது.
இதன்பின்னர் லஹிரு குமார மற்றும் ஆட்டம் இழந்த லிட்டன் தாஸ் இடையில் கடினமான வார்த்தை பிரயோகங்கள் மற்றும் சூடான நிலை காணப்பட்டது.