ஆய்வுப் பணிகளுக்காக தனமல்வில – போதாகம பகுதியில் கஞ்சா செய்கையை முன்னெடுத்த கலாநிதி வசந்த சேனவெலியங்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா செய்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தனமல்வில பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கஞ்சா தொடர்பில் இதுவரையில் இரண்டு நூல்களை எழுதியுள்ள அவர், அண்மையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கஞ்சா செய்கைக்கு அனுமதி கோரியிருந்தார்.
இதேநேரம், கஞ்சா தொடர்பில் அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்கக் கலாநிதி வசந்த சேனவெலியங்க திட்டமிட்டுள்ளதாக அவரின் ஆய்வுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.