நேற்று இலங்கை வந்தடைந்த நனோ நைட்ரஜன் திரவ உரம் என்பதும் இரசாயன உரம் தான் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் டி. எம். சிந்தக

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று இலங்கை வந்தடைந்த நனோ நைட்ரஜன் திரவ உரம் என்பதும் இரசாயன உரம் தான் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் டி. எம். சிந்தக

இந்தியாவில் உள்ள விவசாயிகள் இன்னும் நனோ நைட்ரஜன் திரவ உரங்களைப் பயன்படுத்துவதில் அனுபவமற்றவர்கள் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் டி. எம். சிந்தக தெரிவித்துள்ளார்.

நானோ நைட்ரஜன் திரவ உரத்தை பரிசோதித்து கள பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு விடுவித்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்தியாவில் விவசாயிகளிடையே கூட, இந்த உரத்தைப் பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை எனவும், நனோ நைட்ரஜன் திரவ உரமமும் முற்றிலும் இரசாயன உரமாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் பேட்டன் உரிமம் இலங்கையில் இருந்ததாகவும், அதனை சரியான முறையில் கையாலாமல் இருந்த காரணத்தினால், இந்தியாவுக்கு உரிமம் விற்பக்கப்பட்டதை குறித்து கவலை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

எமக்கு சொந்தமான உரத்தினை நாமே பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்படும் அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் கவலை தெரிவித்தார். 
 (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.