மீண்டும் வெள்ளை வேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் வெள்ளை வேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தனவுக்கு வெள்ளை வானில் வந்தவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வெளியான கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதை ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார். 

கடந்த வியாழக்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான வெள்ளை வான் தனது வீட்டின் பின்புறம் வீதியில் வந்ததாகவும், தனது வீட்டின் அருகே நடமாடியது குறித்தும் அவர் கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களில் ஏதேனும் தகவல் இருந்தால், அவற்றை சிஐடிக்கு சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் நேற்று (12 ஆம் திகதி) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.