அரச பல்கலைகழகங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச பல்கலைகழகங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி!

அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இன்று அறிவித்துள்ளது.

இன்று முதல் எந்தத் திகதியிலும் பல்கலைக்கழகங்களை துணைவேந்தர்கள் மீண்டும் திறக்க முடியும் என யுஜிசியின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கோவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

முதல் கட்டத்தின் கீழ், கோவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்று இரண்டு வாரங்களை பூர்த்திதான மாணவர்கள் மட்டுமே விரிவுரைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக ஆகஸ்ட் முதல் அரச பல்கலைக்கழகங்கள் பூட்டப்பட்டன.

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் சில ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.