எனது பேச்சை அரசாங்கம் கேட்பதில்லை! முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனது பேச்சை அரசாங்கம் கேட்பதில்லை! முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு!


தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயிகள் பற்றி இந்த அரசாங்கத்திடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசாங்கம் தனது பேச்சைக் கேட்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.


பகமுன நகர மத்தியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல இயக்கத்தின் 41 விவசாய அமைப்புக்கள் கடந்த 24 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.


விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து இன்று எட்டு நாட்கள் நிறைவடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.