கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க “அஸ்ட்றாஸெனிகா ஆண்டிபொடி” - வெளியான புதிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க “அஸ்ட்றாஸெனிகா ஆண்டிபொடி” - வெளியான புதிய தகவல்!

கொரோனா ஆண்டிபொடியான, அஸ்ட்றாஸெனிகா தொடர்பிலான சோதனைகளில் இருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்களில் இறப்பை குறைப்பது அல்லது தீவிர நிலைமையில் இருந்து வெற்றியளிப்பதாக பிரித்தானிய மருந்து தயாரிப்பாளர் திங்களன்று தெரிவித்துள்ளார்.

AZD7442 எனப்படும் மருந்தானது, ஏழு நாட்கள் அல்லது அதற்கும் குறைவான தினங்களில் அறிகுறிகளை உடைய நோயாளிகளில் தீவிர கொரோனா பாதிப்பு அல்லது இறப்பு அபாயத்தை 50% குறைத்து, சோதனையின் முக்கிய இலக்கை அடைந்தது.

"எங்கள் ஆண்டிபொடியானது கடுமையான கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தருவதோடு, ஆறு மாத காலத்திற்கு தொடர்ந்து செயல்படவல்லது என அதன் நிர்வாக துணைத் தலைவர் மெனெ பங்கலோஸ் தெரிவித்தார்.

நிறுவனம் தரவுகளை சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு போதுமான வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களை பாதுகாக்கும் வகையில் அஸ்ட்றாஸெனிகா மருந்து ஒன்றை உருவாக்கியும் வருகிறது. இதனையொரு தடுப்பு மருந்தாக பயன்படுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து அவசர ஒப்புதலை கடந்த வாரம் கோரியுமுள்ளது. (யாழ் நியூஸ்)

- ராய்டர்ஸ்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.