ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிரடி அறிவிப்பு!

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையினை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிப்பினை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டமானது நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதன்போதே அரச தலைவர் மேற்படி பணிப்பினை விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் சடுதியாக நாளுக்கு நாள் விலையேற்றம் அதிகரித்துக கொண்டே செல்கின்றது.

கோதுமை மா, சீமெந்து, பால்மா, காஸ் மற்றும் கோதுமை உற்பத்திகளான பாண், பணிஸ், கொத்து போன்றனவும். றைஸ் மற்றும் பால்தேநீர் உள்ளடங்களாக சிற்றுண்டிகளுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டன.

மேலும் பேருந்துக் கட்டணத்தினை உயர்த்த வேண்டும் எனவும் தனியார் போக்குவரத்துச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.