புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு?


எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமென கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இன்று (07) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் புதிய பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பெரும்பாலும் 2022 ஆம் ஆண்டு முற்பகுதியில் குறித்த பரீட்சைகள் நடத்தப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.