சப்பாத்துடன் கோவிலுக்குள் சென்ற பொலிஸ் உயரதிகாரி! யாழில் பெரும் சர்ச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சப்பாத்துடன் கோவிலுக்குள் சென்ற பொலிஸ் உயரதிகாரி! யாழில் பெரும் சர்ச்சை!


யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களுக்குள் காலணிகளுடன் பிரவேசித்த காவல்துறை அதிகாரியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


காங்கேசன்துறை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரே இவ்வாறு ஆகம விதிகளை மீறி ஆலயங்களுக்குள் காலணிகளுடன் சென்றுள்ளார். 


யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல் சென்ற காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.


காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலயங்களுக்கு வெளியில் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். 


எனினும், மேற்படி காவல்துறை அதிகாரி காலணிகளைக் கழற்றாது ஆலயங்களுக்குள் சென்ற விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.