மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு!!


தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (08) முற்பகல் கூடிய கொவிட்-19 கட்டுப்பாட்டு குழுக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, நாடுமுழுவதும் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, சுகாதார வழிகாட்டல்களின் கீழ், கடந்த முதலாம் திகதியுடன் தளர்த்தப்பட்டிருந்தது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை நீக்காதிருக்க கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.