தீ விபத்து; சிறுவர்கள் இருவர் உட்பட ஐவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீ விபத்து; சிறுவர்கள் இருவர் உட்பட ஐவர் பலி!


இராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர்.

நேற்றிரவு (07) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இராகலை காவல்துறையினர் குறித்த வீட்டைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், தீப்பரவலுக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.