மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பேருவளை பெண்ணின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பேருவளை பெண்ணின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!


மலேசியாவுக்கு தொழிலுக்காகச் சென்று அங்கு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும்  பேருவளையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணின் உடல் இன்று நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது.


இப்பெண் மரணித்து சுமார் ஒன்றரை மாதத்தின் பின்னர் அவரது சரீரம் இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.


சதுரிக்கா பிரியதர்ஷனி என்ற குறித்த பெண் கடந்த 2019.12.30 ஆம் திகதி தொழில் நிமித்தம் மலேசியா பயணமானார். அழகுசாதன நிலையத்தில் பணியாற்றுவதற்கு சென்ற குறித்த பெண்ணுக்கு, கொவிட் பரவல் நிலைமை காரணமாக இரண்டு மாதங்கள் மாத்திரமே பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.


பின்னர் அவர் தொழிலை இழந்ததால், மலேசியாவில் அறிமுகமான இலங்கையர் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் தனக்கு பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தமது வீட்டுக்கு அறிவித்திருந்தார். 


இவ்வாறு, பணியாற்றிவரும்போது, அவர் தனது வீட்டாருடன் அவ்வப்போது, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.


எனினும், 2021 ஆகஸ்ட் 30 க்கும் பின்னர் அவரிடமிருந்து எவ்வித அழைப்பும் கிடைத்திருக்கவில்லை என அவரது தாய் தெரிவித்துள்ளார். 


அதன்போது, அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பணி இடத்திலிருந்து அறிவிக்கப்பட்டதாகவும், எனினும், தமது மகளுக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அப்பெண்ணின் தாய் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்திருந்தார். 


எவ்வாறாயினும், அவரது உடல் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது சரீரம் மீதான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.