வெளியில் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் - ஜனாதிபதி அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளியில் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் - ஜனாதிபதி அதிரடி

அரசுக்குள் முரண்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை உள்ளேயே தீர்த்துக்கொள்ளுங்கள் - வெளியில் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த கண்டிப்பான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

அரசதலைவரது செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை அரசுக்குள் சில தரப்பினரிடையே நிலவும் கருத்து மோதல்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது, ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைக்காது, உள்ளேயே அவற்றைத் தீர்த்துக் கொண்டு ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய வலியுறுத்தினார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ஊடகங்களிடம் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.