கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த பெண்! சந்தேக நபரான மருமகன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த பெண்! சந்தேக நபரான மருமகன் கைது!


ஹொரணை - அங்குருவாதொட்ட காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரெமுன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இன்று (31) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரணை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமது மருமகனால் இருவரும் தாக்கப்பட்டுள்ளதுடன், இதில் 58 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அங்குருவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் 36 வயதுடைய கபுஹேன, கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.


கொலைக்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் ஆயுதம் மற்றும் சந்தேகநபர் வந்த உந்துருளி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேகநபரை நாளை ஹொரணை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.