நாட்டில் சினோபார்ம் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சினோபார்ம் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு வெளியான செய்தி!


நாட்டில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடல் தொடர்ந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


சினோபார்ம் தடுப்பூசியின் மூலம் பிறபொருள் எதிரிகள் உற்பத்தி மற்றும் உடலில் உள்ள கொரானா வைரஸுக்கு டி செல்கள் பதில் அளிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.


சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்ற 12 வாரங்களுக்குப் பின்னர், உடலில் உள்ள டி செல்கள் கொரோனா வைரஸுக்கு வெளி உடலாக வெற்றிகரமாக பதிலளித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தரா, அனைத்து வயதினருக்கும் தடுப்பூசியால் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைந்து வருவதாக தெரிவித்தார்.


குறிப்பாக  வைரஸுக்கு எதிரான பிறபொருள் எதிரிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கணிசமாகக் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஏற்பட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் நோயின் தீவிரம் தொடர்பில் பரிசோதனைகள் அவசியம் என்று பரிசோதனைக் குழு கருதுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.