“கிரிப்டோகரன்சி” தொடர்பில் அறிக்கையிட அமைச்சரவையினால் குழுவொன்று நியமிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“கிரிப்டோகரன்சி” தொடர்பில் அறிக்கையிட அமைச்சரவையினால் குழுவொன்று நியமிப்பு!

டிஜிட்டல் வங்கி, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கம் உள்ளிட்ட பிற சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான இலங்கையில் முதலீடுகளை அங்கீகரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க தேவையான சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும் பணி இந்த குழுவிடம் உள்ளது.

அதன்படி, இதற்காக 8 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சுஜீவ முதலிகே தலைமையிலான குழுவின் மற்ற உறுப்பினர்கள், விராஜ் தயரத்ன, ராஜீவ பண்டாரநாயக்க, தர்மஸ்ரீ குமாரதுங்க, ஜயந்த பெர்னாண்டோ, சந்துன் ஹபுகொட, ஏர் கொமடோர் (ஓய்வு) டிஜிஜே அமரசேன மற்றும் மிலிந்த ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.