வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ள இலங்கை மத்திய வங்கி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ள இலங்கை மத்திய வங்கி!


பண அனுப்பல்களை அதிகரிப்பதற்காக 'SL-Remit' என்ற பணம் அனுப்பும் செயலியொன்றை இலங்கை மத்திய வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


அத்துடன் முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவிலான பண அனுப்பல் வழிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


இலங்கைக்கெனப் புதிய பண அனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணம் அனுப்பல் செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி குழுவொன்றினை நியமித்துள்ளது.


இலங்கையின் அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றில் உள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இந்தக் குழு உள்ளடக்குகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.