நாட்டில் மேலும் அதிகரிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருளின் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலும் அதிகரிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருளின் விலை!

நாட்டில் சிமெந்து விலை தொடர்ந்து உயரும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் சிமெந்து விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமையே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் சிமெந்து மூடை ஒன்றின் விலை மட்டும் 1300 ரூபாயை தாண்டுவதாகவும் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் உயரலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் சிமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை அரசு நீக்கிய நிலையில், சிமெந்து மூடைக்கு ரூ.1090 என புதிய விலையை அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆனால், தற்போதைய விலை வரம்பு ரூ.1,300-ஐ தாண்டும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கட்டுமானத் தொழிலின் விலை கடுமையாக உயரும் நிலை உள்ளது. ஏற்கனவே சிமெந்து தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் கடுமையாக முடங்கியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.