மாகாணங்களுக்கு இடையில் உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர் இந்த சேவை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் இன்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர் இந்த சேவை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் இன்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.