யாழில் பேருந்தில் ஏறி ரவுடி குழு நடத்திய கொடூர தாக்குதல்! வயோதிபருக்கு நேர்ந்த விபரீதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் பேருந்தில் ஏறி ரவுடி குழு நடத்திய கொடூர தாக்குதல்! வயோதிபருக்கு நேர்ந்த விபரீதம்!


யாழில் சமீபகாலமாக மர்ம நபர்களில் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செய்கின்ற நிலையில், பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் மேலும் மேலும் தாக்குதல் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

அந்தவகையில் இ.போ.ச பேருந்தில் ஏறி மர்மநபர்கள் நடத்திய தாக்குதல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (14) யாழ். சாவகச்சேரி பகுதியில் சென்ற பேருந்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சையாக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவது,

யாழ். சாவகச்சேரியில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்றுகொண்டிருந்த 775 வழி இழக்க பேருத்தில் ஏறிய 04 பேர் கொண்ட மர்ம நபர்கள் பேருந்தின் நடத்துனரிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ரவுடி கும்பலை பேருந்தில் இருந்து இறக்குமாறு சாரதியும் கூறியுள்ளார். அதை கேட்காத ரவடிகள் தொடர்ந்து பேருந்து நடத்துனருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுவந்ததுடன் நடத்துனரை தாக்கியுள்ளனர்.

இதனை அவதானித்த வயோதிபர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வயோதிபர் என்றும் பாராமல் அவர் மீதும் சரமாரியாக தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த முதியவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.