பொது இடத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி பலியான பிரித்தானிய எம்.பி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது இடத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி பலியான பிரித்தானிய எம்.பி!


பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் பொது இடத்தில் வைத்து கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


69 வயதுடைய பிரித்தானியாவில் கென்சவேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் இன்று (15) பகல் எசெக்ஸ் தென்மேற்குப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.


இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய 25 வயதான சந்தேக நபர் கத்தியால் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் படுகாயத்திற்கு உள்ளாகிய அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.