கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் வீதியில் இறங்கியுள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரிம உரத்தை தாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என சீன தூதுவரிடம் தெரிவித்ததாக திரு. அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவ்வாறான கருத்துக்கள் எதனையும் தாம் வெளிப்படுத்தவில்லை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்பின் பிரதான கவனம் செலுத்தப்பட்டதாகவும் உர விவகாரம் தொடர்பில் சீன தூதுவருடன் மீண்டும் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)