இலங்கை வந்து சில மணிநேரத்தில் திரும்பிய சுற்றுலாப் பயணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வந்து சில மணிநேரத்தில் திரும்பிய சுற்றுலாப் பயணி!


இலங்கைக்கு வந்தததும் 05 மணிநேரத்தின் பின்னர் மீண்டும் அமெரிக்கா திரும்பிய அமெரிக்க சுற்றுலாப் பயணி தொடர்பில் அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.


ஜோச்ஜ் என்ற குறித்த அமெரிக்க சுற்றுலாப் பயணி, கடந்த 07ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக இலங்கைக்குப் பிரவேசித்திருக்கின்றார்.


எனினும் அடுத்த 05 மணிநேரத்தில் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.


இதுபற்றி அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.


அதில், இலங்கை வந்ததும் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து பிரச்சினை இருந்தமை மற்றும் தன்னுடன் தொடர்புகொண்ட சுற்றுலாப் பயண நிறுவனத்தை தொடர்புகொள்ள முடியாமற் போனமை போன்ற பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.


இந்த விடயத்தை அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.